சென்னை, டிச. 16 - ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தை அழித்து விடும்’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது: “நமது நாட்டின் கூட்டாட்சித் தத்து வத்திற்கு எதிரான மற்றும் நடை முறைக்கு சாத்தியமில்லாத ‘ஒரே நாடு ஒரே தேர்தல் ‘திட்டத்தை இந்தியா கூட்டணி வலுவாக எதிர்க்கிறது. இது நம் நாட்டை ஒற்றை ஆட்சி அதி காரத்தின் கீழ் கொண்டு போய் தள்ளிவிடும். மேலும் பன்முகத் தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை முற்றிலும் அழித்துவிடும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதி ரான அதிபர் தேர்தல் முறையை நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. முன்மொழியப்பட்ட இந்த மசோதா, நிறைவேற்றப்பட்டு செயல் படுத்தப்பட்டால், நாடு அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தில் அழியும். அரசியலமைப்பை உருவாக்கியவர் களால் ஏற்படுத்தப்பட்ட சட்ட ரீதி யான பாதுகாப்பு அம்சங்கள் ஒழித்துக் கட்டப்படும். மேலும், மாநிலத் தேர்தல் கள் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழிக்கப்படும். இந்தியாவின் அரசியலை மாற்றி யமைக்கும் ஆபத்தான சட்டங்களை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பி னும் கூட, நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சனை களைத் தீர்ப்பதில் தங்களின் தோல்வி யிலிருந்து திசைத் திருப்ப ஒரு துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசி யலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்துப் போராட வேண்டும்.” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.