மதுரை:
பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நவம் பர் 26 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத் தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கம், மற்றும் போராட்டக்குழு சங்கங்களின் கூட்டமைப்பு பங்கேற்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் கூறினார்.மதுரையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமூகப் பாதுகாப்புடன் கூடிய பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத் தில் மத்திய-மாநில அரசுகள் அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகளை உடனடியாக திரும்ப வழங்கவேண்டும்.பொதுத்துறை நிறுவனங்களான இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல், வங்கி, பாதுகாப்புத்துறை ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்க்க மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள கொள்கை முடி
வைக் கைவிட வேண்டும் ஊழியர்கள் கட்டாய ஓய்வு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத் தும் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.மாணவர் நலன்களை பாதிக் கும் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். பொது விநியோக முறையை சீர்படுத்த வேண்டும்தொகுப்பூதியம், ஒப்பந்த தினக்கூலி சிறப்பு தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 26 ஆம் தேதி ஒரு நாள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.
பேட்டியின்போது அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா, மாநிலச் செயற் குழு உறுப்பினர் இரா. தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.