திண்டுக்கல், மார்ச் 3- திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். பரீத் நஸ்ரீன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். பேராசிரியை சோ. மோகனா கருத்துரையாற்றினார். அறிவியல் இயக்க விருதுநகர் மாவட்டச்செயலாளர் மாடசாமி, கணிதத்துறை தலைவர் முனைவர் ராமேஸ்வரி, கருத்தாளர் விஷ்ணுபிரியா, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ, மாணவியர்கள் தேசிய அறிவியல் இயக்க தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மானஸ்வினி நன்றி கூறினார். நிகழ்ச்சி யில் மாணவ, மாணவியர்கள் செய்த அறிவியல் கண்டு பிடிப்புகளை பேரா.சோ.மோகனா, மாடசாமி ஆகியோர் பார்வையிட்டனர். . கல்லூரியின் முதல்வர் செந்தில்கும ரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் 21 பேர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பி னர்களாக இணைந்தனர். மார்ச் மாதம் 22ம் தேதி இதன் தொடக்கவிழா நடைபெறுகிறது.