tamilnadu

img

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்பரிசு வழங்கல்....

தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான மையங்களில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  26 காளைகளை அடக்கி பரிசு வென்ற விஜய் என்ற வீரருக்கு கீழடி நினைவுப் பரிசினை, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் டி. செல்வா,  பகுதிக் குழு  செயலாளர் கே.குரோனிசெந்தில், பகுதிக் குழுத்  தலைவர் எஸ்.சுரேஷ்குமார், பி.விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பகுதிக் குழு செயலாளர் ஏ.எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;