புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களுக்கு எழுத்தறிவு தேர்வு
அறந்தாங்கி, ஜுன் 15- மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பாக, ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 மையங்களில் கற்றல் மையங் களுக்கு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செழியன், அமுதா, மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்ட னர். ஒவ்வொரு கற்றல் மையங்களிலும் உள்ள கற்போருக்கு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. வாசித்தல், எழுதுதல், எண்ணறி போன்ற அனைத்து நிலைகளிலும் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடை பெற்றது. இந்நிகழ்வில் மணமேல்குடி ஒன்றி யத்திற்கு உட்பட்ட 23 மையங்களில் இருந்து 470 கற்போர்கள் தேர்வு எழுதினர். ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசி ரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்கா ணிப்பாளராக இருந்து தேர்வினை நடத்தி னர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில், 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 20 மை யங்களில் நடைபெற்றது. இதில் 15 வயது முதல், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் பயின்று வந்தனர். அவர்களுக்கு ஞாயிற் றுக்கிழமை இறுதித் தேர்வு நடைபெற்றது. இதில் 20 மையங்களில் 940 கற்போர்கள் தேர்வினை சிறப்பாக எழுதினார்கள். இத்தேர்வினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மையத்தின் தன்னார்வ லர்கள் நடத்தினர். இத்தேர்வினை வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன், ஆசிரிய பயிற்றுநர் ஷாஜிதா பானு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.