இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற யுத்தவெறிக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்!
சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவல்
சென்னை, ஜூன் 15 - பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரே லின் மனிதத் தன்மையற்ற நடவடிக் கைகள் மற்றும் யுத்த வெறியை கண் டித்து அனைவரும் ஒன்றிணைந்து கண்டனம் முழங்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பாலஸ்தீனத்தில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், அடிப்படை கட்ட மைப்புகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு, குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்களை கொன்று, ஒரு பகுதி மக்களை அங்கிருந்து விரட்டி விட்டு, போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறி வித்தது. போர் நிறுத்தத்தை நம்பி காசா பகுதிக்குள் வந்த பாலஸ்தீனர்கள் மற்றும் அங்கிருக்கும் மக்களும் பசி, பட்டினியால் மடிந்து போகும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை அனுப்பி வைக்கும் உணவு, குடி தண்ணீர், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் காசா பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து தடுத்து வருகிறது. இதனால் தினசரி ஆயிரக்கணக் கான மக்கள் பசி-பட்டினியால், நோ யால் மரணம் அடையும் நிலையை நாக ரீக உலகம் சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற் பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த கொடுமைகளுக்கு எதிராக உலக மக்கள் திரண்டு கண்டனங் களை தெரிவிப்பதோடு, பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல், தற்போது ஈரான் மீது போர் தொடுக் கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு உள்ளது. இதற்கு பின்புலமாக உள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடு களின் செயல்கள் வன்மையான கண் டனத்துக்குரியது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி காப்பாற்றப்பட வேண்டும், அவர்களின் அடிப்புடை தேவைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டும், பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை கைவிட்டு, போர் நிறுத் தத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உட்பட யுத்தத்தை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போ ராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழக மக்களும் இந்த யுத்தத்திற்கு எதி ராக குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.