மதச்சார்பு கொண்ட நாடாக மாற்றும் முயற்சியை தடுத்து முறியடிப்போம்!
விசிக திருச்சி மாநாட்டில் தீர்மானம்
திருச்சி,ஜூன் 15- ‘மதச்சார்பின்மை காப் போம்’ என்ற தலைப்பில் விடு தலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் சனிக் கிழமை மாலை பேரணி, பொதுக்கூட்டம் நடை பெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற பேரணியை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் எம்.பி, தலைமை வகித்து தொடங்கி வைத் தார். இப்பேரணி குட்ஷெட் பாலம், தலைமை அஞ்சல் அலுவலகம், ஒத்தக் கடை வழியாக மாநகராட்சி அலு வலகம் அருகில் நிறை வடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசுகை யில், “இந்திய அரசியலை யே மதச்சார்பின்மைக்கு எதி ரானவர்கள், ஆதரவான வர்கள் என்று கூர்மைப்படு த்தும் அரசியலை விசிக மட்டும் முன்னெடுக்கிறது. கூட்டணியில் இருந்தும்யில்லை. பல இடங்களில் கொடியேற்ற, பொதுக் கூட்டம் நடத்த முடியவில்லை. திமுகவுடன் கொண்டிருக்கும் உறவு என்பது கொள்கை உறவு. இடங் களை பற்றி பேச்சுவார்த்தையில் முடிவு செய்வோம். திமுக அரசு மீதான இருக்கிற விமர்சனங்களை தாண்டி தேர்தல் உறவை வைத்துக் கொள் கிறோம் என்றால், அது தொலை நோக்குப் பார்வையுடன் கொண்ட கொள்கை முடிவு. தமிழ் தேசியம் என்ற பெயரால் சிலர் திமுக வெறுப்பு அரசியலை மட்டு மல்ல. ஒட்டுமொத்தமாக திராவிட அரசி யலையே எதிர்த்து வெறுப்பு பரப்பு வதன் மூலம் சனாதன சக்திகளுக்கு துணை போகிறார்கள். இதை நம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். பேரணி, பொதுக்கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம். பி.. எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், மாநில பொதுச் செயலாளர் வன்னி அரசு, கடலூர், கள்ளக் குறிச்சி மண்டல செயலாளர் சவுதி சி.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் இந்த பேரணியின் முடிவில், “இந்தியாவை மதச்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதற்குச் செய்யப்படும் எந்தவொரு முயற்சியையும் தடுத்து முறியடிப்போம். முஸ்லிம்களுக்கு எதி ரான வக்ஃபு திருத்தச் சட்டத்தையும், குடியுரிமை திருத்தச்சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது குடி யுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படை யில், மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பேரேடு தயாரிப்பை கைவிட வேண்டும். 2005-ல் அறி முகப்படுத்தப்பட்டு, 2014-ல் கைவிடப் பட்ட மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். ஜம்மு- காஷ்மீருக்கு மாநில தகுதி அளிக்கும் சட்ட நடவடிக்கை களை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மதம் மாறிய பட்டியல் சாதியினர், பிற பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும்” என்பன உள்ளிட்ட 12 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.