tamilnadu

img

கேரளாவின் மதச்சார்பற்ற மரபு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது - எம்.ஏ.பேபி

கேரளாவின் மதச்சார்பற்ற மரபு  மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது

திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் (TDB) பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய ஐயப்ப சங்கமம் ஒரு பெரும் வெற்றியாக அமைந்தது. 15 நாடுகள் மற்றும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 4,126 பங்கேற்பாளர்கள் – இதில் பிற மாநிலங்களில் இருந்து 2,125 பேரும், வெளிநாடுகளில் இருந்து 182 பேரும் அடங்குவர் – செப்டம்பர் 20-ஆம் தேதி பம்பாவில் நடந்த இந்த சங்கமத்தில் கலந்து கொண்டனர். இது, சபரிமலை மாஸ்டர் பிளான், முன்மொழியப்பட்ட சபரிமலை விமான நிலையம், மற்றும் முன்முயற்சிகள் போன்ற வளர்ச்சித் திட்டங்க ளைப் பற்றி விவாதிக்கும் ஒரு முக்கியமான மேடையா கவும் அமைந்தது. இது ஒரு அரசியல் செய்தியாக வும் இருந்தது, இது கேரளாவின் பொதுச் சமூகம், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு விட்டுக்கொடுக்கப்படப் போவதில்லை என்பதை வலியுறுத்தியது. மதச்சார் பற்ற தன்மை என்பது அரசியலமைப்பின் ஒரு சுருக்க மான கொள்கை மட்டுமல்ல, மாறாக கேரளாவின் புனித யாத்திரை மரபுகளில் உயிர்ப்போடு விளங்கும் ஒரு நடைமுறை என்பதையும் இது அறிவித்தது.