tamilnadu

சு.வெங்கடேசன் எம்.பி., தலையீட்டால் இந்தி திணிப்பு முறியடிப்பு

மதுரை, அக்.25- ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள்  இந்தியில் மட்டும் நடத்த அறி விக்கப்பட்டு கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி யில் இருந்து நடைபெற்று வந்தன. இதை  விமர்சித்து, இந்தி பேசாத மாநில ஊழி யர்கள் வசதிக்காக அவரவர் தாய்மொழி யிலோ  அல்லது ஆங்கிலத்திலோ இணைய வழி பயிற்சி தனியாக திட்டமிட்டு நடத்திட வேண்டும்; அதுவரை இந்தி பேசாத மாநி லத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பயிற்சி க்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.  

கோரிக்கையை ஏற்று இப்போது 25 ஆம் தேதியில் இருந்து ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க ரயில்வே நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது .அதன் நகல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  21ஆம் தேதி  இந்தியில் நடந்த பாடத்தை 25ஆம் தேதி ஆங்கிலத்தில் நடத்திட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நவம்பர் இரண்டாம் தேதி வரை பயிற்சி அளிக்க திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி காலையில் இந்தி பேசுபவர்களுக்கு இந்தியிலும் மாலையில் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் வகுப்பு நடைபெறும். இது இந்தி பேசாத மாநில ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.  இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி., விடுத்துள்ள செய்தியில், “இந்தப் பிரச்சனையை  கவனத்திற்கு கொண்டு  வந்த ரயில்வே மருத்துவ ஊழியர்களை யும், டி ஆர் இ யூ (DREU) தொழிற்சங்கத் தோழர்களையும் பாராட்டியுள்ளார்.  அதே நேரத்தில் பயிற்சிகளை அவரவர் தாய் மொழியிலும் நடத்த வேண்டும் என்கிற தனது கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்”.

;