tamilnadu

img

ஓட்டப்பந்தயத்திற்கு கிராக்கி


வாலிபர் சங்க விளையாட்டு போட்டியில் பல்வேறு தடகள பிரிவுகள் நடத்தப்பட்டாலும் மாணவர்கள் அதிகஆர்வத்துடன் பங்கேற்றது ஓட்டபந்தயம் தான். அதிலும் விரைவு ஒட்டப்பந்தயமான  100 மீ தான் அவர்களுக்கு பிடித்த பிரிவாக அமைந்தது. மொத்தம் 1800 பேர் (தோராயமாக) இந்த தொடரில் ஓட்டபந்தியத்திற்கு மட்டும் 1000க்கும் அதிகமானோர் களமிறங்கினர் என்பது குறிபிடத்தக்கது.  

உணவு குடிநீர் தாராளம்...
போட்டி நடத்த 2 நாட்களின் மூன்று வேலைகளிலும் தடையின்றி உணவு, தண்ணீர் தாராளமாக வழங்கப்பட்டது.  போட்டியில் பங்கு பெற்றவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் உணவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக வாலிபர் சங்க நிர்வாகிகள் இரவு பகலாக உறங்காமல் தங்களது வீட்டு வேலையை போன்று செவ்வென செய்து அசத்தினர்.

பாதுகாப்பு அற்புதம்...
விளையாட்டு வீரர்கள் போட்டியில்   காயமடைந்தால் அவர்களை தூக்கிச் செல்ல வாலிபர் சங்க நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். ஒவ்வொரு விளையாட்டு பிரிவுக்கும் 5 பேர் பாதுகாப்பு அரண் போன்று நின்று போட்டிகளுக்கும், வீரர் - வீராங்கனைகளுக்கும் பாதுகாப்பு அளித்தனர்.      

;