tamilnadu

img

கொரோனா சிகிச்சை பலனின்றி தோழர் சமம் காலமானார்....

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் மதுரை புறநகர் மாவட்டம் வண்டியூர் கட்சிக் கிளையின் முன்னாள் செயலாளருமான மூத்த தோழருமான சமம் (சாகுல்ஹமீது) (74  கொரானோவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிறன்று காலமானார்.  

தோழர் சமம்,  1967-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து வண்டியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சிக்கிளைகளை உருவாக்கியவர். உழைப்பாளி மக்களின் போராட்டங்களில் பங்கேற்றவர். மதுரை புறநகர் மாவட்டத்தின் கட்சி வளர்ச்சியில் இவரது பங்கு அளப்பரியது. கட்சியின் கிழக்கு ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை வில்லாபுரத்தில் நடைபெற்றது.  அவருக்கு கமர்நிஷா என்றமனைவியும், ரஷ்யாபானு என்ற மகளும் உள்ளனர்.தோழர் சமம் மறைவிற்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன்,  கிழக்கு தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன் மற்றும் கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள்  தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

;