tamilnadu

விருதுநகரில்  17 பேருக்கு கொரோனா

மதுரை, மே 25- தமிழக அரசு திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் விருதுநகர் மாவட்டத்தில் 17 பேர், இராமநாதபுரத்தில் ஐந்து பேர், தேனியில் இரண்டு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்லில் தொற்றுப்பர வல் இல்லை.  தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு தொற்றுக்கான அறிகுறியே இல்லை என விளக்கமளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், 12 சதவீதம் பேருக்கே தொற்றுக் கான அறிகுறிகள் உள்ளதாகக் கூறி னார். இவர்களில் காய்ச்சல் அறிகுறியுடன் 40 சதவீதம் பேர், இருமலுடன் 37 சத வீதம் பேர், தொண்ட வலியுடன் 10 சத வீதம் பேர், மூச்சுத்திணறலுடன் 9 சத வீதம் பேர், மூக்கிலிருந்து நீர் வழிதல் மூலம் 4 சதவீதம் பேரும் பாதிக்கப்படு கின்றனர் என்ற புள்ளிவிவரத்தையும் கூறி னார் அமைச்சர்.