குத்தாலம் அரசு மருத்துவமனையில் 2 பெண் தொழிலாளர்கள் பணி நீக்கம் சிஐடியு கண்டன போராட்டம்
மயிலாடுதுறை, ஜுன் 5 - மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 2 தூய்மை காவலர்களை எந்தவித காரண முமின்றி பணி நீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து, இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் (சிஐடியு) குத்தாலம் அரசு மருத்துவமனை முன்பு புதனன்று காலை துவங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக பணி செய்து வந்த 2 பெண் தொழி லாளர்களை, எந்தவித காரணமுமின்றி பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திட வலியுறுத்தியும் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செய லாளர் பி.சுந்தர், டி.மாதவன், கே.கே.சர வணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமானுஜம், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராமகுரு உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். உரிய நடவடிக்கை இல்லாததால், போராட்டக்காரர்கள் அங்கேயே சமைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி யது.