tamilnadu

img

பகத்சிங் ஒரு போதும் மஞ்சள் தலைப்பாகை அணிந்ததில்லை வரலாறு தவறாகி விடக்கூடாது

புதுதில்லி, ஏப்.16- சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மஞ்சள் தலைப் பாகையுடன் இருக்கும் படம் ஆம் ஆத்மி கட்சியி னரால் தற்போது அதிகளவில் பரப்பப்படுகிறது. ஆனால் மஞ்சள் தலைப்பாகையுடன் ஒரு போதும் பகத்சிங் இருந்ததில்லை என்றும் மஞ்சள் தலைப்பாகை அணிந்துள்ள இந்த படம் 1975-ஆம் ஆண்டு வரை யப்பட்ட பகத்சிங் ஓவியம் என்றும் வரலாற்றாசிரியர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து பகத் சிங் பற்றிய பல புத்தகங்களை எழுதிய வரலாற்றாசிரியர் சமன் லால் கூறுகையில், ”உண்மையில்,  பகத் சிங்கின் நான்கு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. சிறுவயதில் லாகூர் தேசியக் கல்லூரி யில் வெள்ளைத் தலைப்பாகையுடன் இருந்தது, லாகூரில் போலீஸ் காவலில் இருக்கும்போது,

 அவர் தலைப்பாகை அணியாமல் அமர்ந்திருப்பது. மற் றொன்று அவர் கட்டிலில் அமர்ந்திருப்பது, நான்கா வது, தாடி டிரிம் செய்யப்பட்டு தொப்பி அணிந்திருப்பது ஆகியவை மட்டுமே. பஞ்சாபில் ஆத்ஆத்மி ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். மான் பதவியேற்றவுடன் சட்டமேதை அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது படங்கள் மாநில அரசு அலுவலகங்களில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  பஞ்சாபில் அரசு அலுவலகங்களில்  பகத்சிங்கின் நான்கு படங்களில் ஒன்றை வைப்பதற்குப் பதிலாக, 1975-ஆம் ஆண்டு ஓவியக் கலைஞர்  அமர் சிங் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில் ஒரு படத்தை அன்றைய நிர்வாகம் தேர்வுசெய்தது.  ஓவியங்களுக்கு தடை இல்லை.  பகத்சிங்கின் வரையப்பட்ட ஓவியப்படத்தை வீடுகளிலோ அல்லது பொதுக் கூட்டங்களிலோ பயன்படுத்தலாம், ஆனால் அரசு அலுவலகங்களில் வைப்பதற் கோ அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கோ பயன்படுத்தக் கூடாது.

ஓவியத்தை பயன்படுத்துவது கூடாது

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சர்தார்  படேல் உள்ளிட்ட மற்ற தலைவர்களுக்கு வரையப்பட்ட ஓவியத்தைப் பயன்படுத்தாதவர்கள்  ஏன் பகத்சிங்கு க்கு மட்டும் ஓவியம் சார்ந்த புகைப்படங்களைப் பயன் படுத்துகிறார்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார். பகத்சிங் மஞ்சள் தலைப்பாகை அணிவது பிரபலமாகிறது என்றாலும்,  அந்தப்படம்  ஒரு கலைத் தோற்றத்தின் வடிவத்தை பிரதிபலிக்கிறது. அது அவரது அசல் உருவமல்ல.  1975-ஆம் ஆண்டு வரை, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பகத்சிங்  தொப்பி அணிந்த புகைப் படத்தைத் தவிர வேறு எந்த புகைப்படமும் வெளியிடப் படவில்லை. “அடையாள அரசியல்” வந்த பிறகுதான் பதக்சிங்கின் வரையப்பட்ட ஓவியங்கள் பிரபலமாகின. 

உத்தம்சிங் படமும் உண்மையல்ல

பஞ்சாபிலிருந்து வந்த புரட்சியாளர்களை சீக்கி யர்களாகக் காட்ட அடுத்தடுத்த மாநில அரசாங்கங்கள் மேற்கொண்ட “தீவிர முயற்சிகள்” மற்ற புரட்சியாளர்கள் மற்றும் நாத்திகர்களின் படங்களையும் சிதைக்க வழிவகுத்தது. இவர்களில் உத்தம் சிங் மற்றும் கர்தார் சிங் சரபா ஆகியோரும் அடங்குவர்.  உத்தம் சிங் புகைப்படங்களும் உண்மையானவை அல்ல. சரபா தலைப்பாகை அணிந்திருப்பதும் தவறானது. உத்தம் சிங்கின் உண்மையான புகைப்படங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அவர் எப்போதாவது  ஒரு முறை தலைப்பாகை அணிந்திருப்பார். ஆனால் அவர் தாடி வைத்ததாக படம் இல்லை. அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் அரசு அமைத்த சிலை கூட பொய்யானது என்கிறார் சமன்லால். பகத்சிங் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார், பின்னர் அவர் தம்மை மதத்திலிருந்தும் விலக்கிக் கொண்டார். தாம் நாத்திகர் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்பான் ஹபீப்

புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எஸ். இர்பான் ஹபீப் கூறுகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பிற அரசியல் கட்சிகள் “தவறான புகைப்படங் கள்” மூலம்  பகத்சிங்கை ஒரு சீக்கியர் என அடையா ளப்படுத்த முயற்சிக்கின்றன.  “பகவந்த் மான் (முதல்வர்) அரசியலுக்கு வரும் வரை ஒருபோதும் ‘பக்ரி’ (தலைப்பாகை) அணிந்த தில்லை, ஆனால் இப்போது அவர் அதை அணிய விரும்பினால், அது அவரது விருப்பம், நாங்கள் அதைக் கேள்வி கேட்கவில்லை.  மான் அணிந்துள்ள மஞ்சள் தலைப்பாகையை பகத் சிங்கிற்கு  அணிவிக்காதீர்கள். அவருக்கும் மஞ்சள் நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவருடைய விருப்பமும் அல்ல”, என்றார்.            

                                     -பிடிஐ