tamilnadu

img

கடையநல்லூரில் 60 லட்சம் லிட்டர் தாமிரபரணி குடிநீர் வீணாக சாலையில் ஓடியது

திருநெல்வேலி, ஜூன் 21- நெல்லை மாவட்டம் கடையநல்லூரில்  60 லட்சம் லிட்டர்  தாமிரப ரணி குடிநீர்  வீணாக சாலை யில் ஓடியது  நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி க்கு  தாமிரபரணியிலிருந்து  கடையநல்லூர், புளி யங்குடி  உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர்  கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியி லும் தரைமட்ட தொட்டி அமைத்து அதிலிருந்து  மோட்டார் மூலம் மேல் நிலைப்  குடிநீர்  தொட்டிக ளுக்கு அனுப்பி அதன்படி கடையநல்லூர் நகர் முழு வதும் சுமார் 13  ஆயி ரத்திற்கும் மேற்பட்ட. வீடுகளுக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை  இரவு கடையநல்லூரில் தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்ட குடிநீரை இரவு ஊழியர்  முறையாக மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு ஏற்றா ததால் 60 லட்சம் லிட்டர் தண்ணீர்  வீணாக கழிவுநீர் ஓடை வழியாக  அருகே உள்ள காயிதே மில்லத் திடலில் ஆறாக ஓடியது. இவ்வாறு மாதத்திற்கு  மூன்று நாட்கள்   தண்ணீர் வீணாக ஓடுகிறது. அருகில் உள்ள திடல்   குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது. இரவு நேர ஊழியர்கள் நீர் ஏற்றத்தை  சரியாக கண்காணிக்க தவறியதால்  இவ்வாறு தண்ணீர் வீணாகிறது கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.