மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிவண்டி பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 3.30மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின்போது குடியிருப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்