சீர்காழி, ஆக.10- சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றி யத்தின் கிழக்கு பகுதிகளில் ஓஎன்ஜிசி சார்பில் மாதனம் திட்டம் என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிண றுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் திராவக நிலை யிலான எரிவாயுவை வர்த்தக நிறுவ னங்களுக்கு கொண்டு செல்ல, கொள்ளி டம் பகுதியில் வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகளின் வழியாக மே மாத்தூருக்கு 32 கிலோமீட்டர் தொலை வுக்கு விளைநிலங்கள் வழியாக எரி வாயு குழாய் அமைக்கும் பணி கடந்த இர ண்டு ஆண்டுகளுக்கு முன்பு கெயில் நிறு வனத்தால் தொடங்கப்பட்டது. இதற்காக 1.5 மீட்டர் ஆழத்தி ற்கு பூமிக்குள் குழாய்கள் புதைக்கப்ப ட்டன. இத்திட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விவசா யிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பெருந்திரளாக ஒன்றுக்கூடி குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரி வித்து போராடியதால், பொதுமக்க ளின் கருத்துக்கேட்பிற்கு பிறகு குழாய் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க ப்பட்ட வேளாண் மண்டலமாக அறி வித்தார். அதனைத் தொடர்ந்து இப்பகு தியில் விவசாய பணிகளை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்படாது என அறிவித்திருந்தார். விவசாயிகளின் தொடர் போராட்ட ங்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட கெயில் குழாய் புதைக்கும் பணி, கொ ரோனா பேரிடரின் ஊரடங்கு காலத்தி லும், புதிய வழித்தடத்தில் சீர்காழி அரு கேயுள்ள திருநகரியிலிருந்து உச்சி மேடு, வெள்ளக்குளம், கேவரோடை, இருவக்கொல்லை கிராமங்களின் வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேமிப்பு மையத்திற்கு குழாய் புதைக்கும் பணிகளை அவசரகதியில் கெயில் நிறுவனம் செய்து வருகிறது. கெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணியால் விவசாயிகளின் விளைநி லங்கள் பாதிக்கப்படும். வாழ்வாதா ரங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயி கள் நிர்க்கதியாக நிற்கும் அவலம் ஏற்படும்.
மேலும் பொதுமக்களின் கருத்து க்களை கேட்காமல் இத்திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. இது போன்ற பெரும் திட்டங்களை செயல்படுத்தும் போது அப்பகுதி மக்களின் கருத்து க்களை கேட்பது அவசியம் என உச்சநீதி மன்றம் கூறியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அறிவித்த பாதுகா க்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறி வித்த பகுதிகளில் மீண்டும் கெயில் நிறு வனம் எண்ணெய்க் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் புதிய பேரழிவுத் திட்டங்களை கொண்டு வந்து, அதற்காக காலங்காலமாக பய ன்பாட்டிலுள்ள விவசாய நிலங்களை அழிப்பது அநீதியாகும். சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய கெயில், சாகர்மாலா, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்க ளுக்கு அனுமதியளிப்பதும், பல தலை முறைகளுக்கு பயனளிக்கும் விவசா யத்தை அழிப்பதும், கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமமாகும். ஏற்க னவே, வறட்சி, மழை, வெள்ளம், கடன்சுமை போன்ற பிரச்சனைகளினால் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் இது போன்ற பேரழிவுத் திட்டங்களினால் காற்று மாசுபடும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, கெயில் குழாய் புதைப்பு பணிகளை உடனடியாக நிறு த்திட வேண்டும் எனவும், டெல்டா பகுதி களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர் அறி வித்தது என்னவாயிற்று என கடலோர பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்க ளைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.