மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்
பொன்னமராவதி, ஜூலை 24- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் தங்களிடம் உள்ள பழைய அட்டை களை புதுப்பிக்கும் விதமாக இம்முகாம் நடை பெற்றது. மேலும் இம்முகாமில் தேசிய அள விலான மத்திய அரசின் மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் வசந்தராமக்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி ஸ்மார்ட் கார்டு வழங்கினார். இதில் முடநீக்கு வல்லுநர் ஜெகன் முருகன் மற்றும் மாற்றுத்திற னாளிக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் அட்டை வழங்கல்
மண்ணச்சநல்லூர், ஜூலை 24- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள் ளறை ஊராட்சியை சேர்ந்த குன்னாக்குளம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ச.முருகேசன் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கி னார். நிகழ்ச்சியில் சங்க மாவட்டப் பொருளாளர் ஆனை முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.