tamilnadu

img

10 ஆண்டுகளாக மண்ணில் புதைந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய ரோடு ரோலர்

சீர்காழி, ஆக.11- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக ரோடு  ரோலர் உள்ளது. இதன் மூலம் கொள்ளி டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை  சேர்ந்த கிராமங்களில் சாலை மேம்படுத்து தல், புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.  ஊராட்சிகளில் சாலை மேம்படுத்தும் பணி களுக்கு தற்பொழுது ரோலர் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு பதிலாக எந்திரம் தனியாரிடம் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்ப டுகிறது. இதனால் ஊராட்சி நிதி வீணடி க்கப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ரோடு ரோலர் காணாமல் போனதாக தகவல் வெளி யாகி இருந்தது. பின்னர் எங்கு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரோடு ரோலர் கொள்ளிடம் அருகே உள்ள கடைக்க ண்விநாயக நல்லூர் கிராமத்தில் சாலையோ ரம் மண்ணில் புதைந்து கிடக்கிறது. இந்த ரோலர் எந்திரம் ஏன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது அனை வருக்கும் புதிராகவே உள்ளது. இதுவரை அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, அந்த எந்திரம் குறித்து கண்டு கொ ள்ளவும் இல்லை. இந்த எந்திரத்தை பய ன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.