tamilnadu

img

முறைசாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஆக.1- பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் காந்தி சிலை எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறை சாரா தொழிலாளர்கள் சிஐடியு வியா ழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், சி.ராஜகுமாரி, ஆர்.குணசேகரன், எம்.செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலை வர்கள் பி.ரெங்கராஜ், ஏ.கணேசன், சி.சண்முகம், எம். பன்னீர்செல்வம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர்.  பெரம்பலூர் நகராட்சியில் வெண் அடர்ஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சந்தைப்பேட்டை வசூலை முறை பபடுத்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலர்கள் ஏ. ரெங்கநாதன், ஆர்.ராஜகுமாரன், கே. மணிமேகலை, பி.முத்துச்செல்வி, எஸ். சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.