tamilnadu

img

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரத்து

புதுதில்லி,ஜூன் 20- எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.  அதிகரித்து வரும் வாகனப் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதனால் வாகன இன்ஜின் விதிமுறைகளும் கடுமை யாக்கப்பட்டு வருகின்றன. 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சாலைகளில் சுமார் 70 லட்சம் எலெக்ட்ரிக் வாக னங்கள் இயங்கும்படியான திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தி வரு கிறது. இதன் கீழ் வாகனப் போக்கு வரத்தில் 30 சதவிகித அளவை எலெக்ட்ரிக் மயமாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை  ஊக்குவிக்கும்  வகை யில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எலெக்ட்ரிக் மோட்டார் பைக், எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா, எலெக்ட்ரிக் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படும். 2015ஆம் ஆண்டு பாரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தத்தில் இந்தியா அளித்த உறுதிப்படி எலெக்ட்ரிக் வாகன மாற்றத்துக்கு இந்தியா மிக வேகமாக மாறிவருகிறது. சமீபத்தில் டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் தங்களது வாகனங்களில் 40  சதவிகிதம் அளவை 2026ஆம் ஆண்டுக் குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற  வேண்டும் என்று அரசு உத்தரவிட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது.