tamilnadu

img

ஜம்ஜம் புனித நீரை விமானத்தில் கொண்டு வர தடையில்லை : ஏர் இந்தியா

புதுதில்லி:
புனித ஹஜ் பயணத்தின் போது முஸ்லிம்கள் மெக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்து வர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.ஹஜ் புனித பயணத்தின் போது மெக்காவில்இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து வருவதை இஸ்லாமியர்கள் வழக்கமான வைத்துள்ளனர். இந்த நிலையில், மெக்காவுக்கு சேவை அளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு விமானங்களில் ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக அறிவிப்பு வெளியானது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இதை யடுத்து அந்த அறிவிப்பினை திரும்ப பெறுவ தாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மெக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களில் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகளு டன் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என்று ஏர் இந்தியாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;