tamilnadu

img

தீக்கதிர் முக்கியச் செய்திகள்....

தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்துள்ள கட்டண உயர்வால்   காய்கறி, மளிகைபொருட்கள் உள்பட அத்தியாவசியப்பொருட் களின் விலை அதிகரிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது.

                                                                                                                   **************
ஜம்மு மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப்.,படைக்கான ஐ.ஜி.,யாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாருசின்ஹா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

                                                                                                                   **************
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

                                                                                                                   **************
கோபியில் உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.4 கோடி மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

                                                                                                                   **************
மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருந்தாலும் பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும்நிலை இப்போது இல்லை என்றுபள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

;