புதுதில்லி:
செல்வத்தை உருவாக்கும் செல்வந்தர்களே இந்தியாவின் செல்வங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் புதுதில்லியில் தேசியக் கொடியைஏற்றிவைத்து, பிரதமர் மோடி உரை யாற்றினார். அந்த உரையிலேயே இவ்வாறு புகழ்பாடியுள்ளார்.“இன்றைய இந்திய அரசாங்கமானது நிலையான கொள்கைகளை கணிக்கக் கூடியது. இந்தியாவுடனான வர்த்தகம் குறித்துஆராய உலகமே இன்று ஆர்வமாக உள்ளது. விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நமது பொருளாதாரத்தின் அடிப்படை கள் வலுவானவை.செல்வத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறந்த தேசியச் சேவை.செல்வத்தை உருவாக்கு பவர்களை சந்தேகத்துடன் பார்க்கவேண்டாம். ஏனெனில் செல்வம் உருவாக்கக்கப்படும் போது, அந்த செல்வம்தான் விநியோகிக்கப்படவும் போகிறது. செல்வத்தை உருவாக்குவது முற்றிலும் அவசியம். செல்வத்தை உரு வாக்குபவர்களே இந்தியாவின் செல்வம். நாங்கள் (இந்திய அரசு) அவர்களை மதிக்கிறோம். இவ்வாறு மோடி பேசியுள்ளார்.