tamilnadu

img

நாடு முழுவதும் 303 இடங்களைப் பெற்றாலும்...10 மாநிலங்களில் ‘முட்டை’ வாங்கிய பாஜக!

புதுதில்லி:
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக 303 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. மத்திய ஆட்சியையும் தக்க வைத்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 300 இடங்களுக்கு மேல் பாஜக வென்றாலும், 6 மாநிலங்கள் 4 யூனியன்பிரதேசங்களில் பாஜக-வுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்ற அவலமும் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மொத்தம் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.இவற்றில், தமிழ்நாடு,ஆந்திரா, கேரளா, மேகாலயா, மிசோரம், சிக்கிம் ஆகிய 6மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. அந்தமான், புதுச்சேரி, லட்சத்தீவு, தாதர் நாகர் ஹவேலி ஆகிய 4 யூனியன் பிரதேசங்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.இதேபோல, ஆந்திரப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம், குஜராத், ஹரியானா,இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், சிக் கிம், திரிபுரா, உத்தர்கண்ட் ஆகிய 13 மாநிலங்களிலும், தில்லி, சண்டிகர், தாதர் நாகர் - ஹவேலி, டாமன் டையூ ஆகிய 4 யூனியன் பிர
தேசங்களிலும் காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

இதனால், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ் தைக் கூட பெறமுடியாத நிலை, காங்கிரசுக்கு இரண்டாவது முறையாக ஏற்பட் டுள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு 55 எம்.பி.க்கள்வேண்டும். ஆனால் காங்கிரசுக்கு 51 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். 2014 மக்களவைத் தேர்தலிலும் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.மீண்டும் துவங்கியது சங்-பரிவாரின் வெறியாட்டம்