புதுதில்லி, ஜூலை 25- தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை க்குத் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்கள் வியாழனன்று பதவியேற்றுக் கொண்டனர். புதிய எம்.பி.க்கள் பதவி யேற்பு நிகழ்ச்சி வியாழனன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் சந்திரசேகரன், முதலாவதாக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து முகமது ஜான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக உறுப்பினர்கள் சண்முகம், வில்சன் ஆகிய அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு வாழ்த்து கூறினார். அன்புமணி ராமதாஸ் தவிர்த்து மற்ற அனைவரும் பதவியேற்றுள்ளனர்.