tamilnadu

img

பாஜகவினருக்கு காதல் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்... தேர்தல் ஆணையத்தை சாடிய ரன்தீப் சிங்

புதுதில்லி, ஏப்.7-

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு, தேர்தல் ஆணையம் காதல் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும், பிரதமர் மோடிதுவங்கி பாஜகவினர் அனைவரும் தேர்தல் நடத்தை விதிகளைஅப்பட்டமாக மீறி வரும் நிலையில், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கண்டிப்பான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள் ளது.ராணுவத்தை மோடியின் சேனை என்று ஆதித்யநாத் கூறினார். அதற்கு ஒரு நோட்டீஸை தேர்தல் ஆணையம் அனுப்பியது.அதன்பிறகுதான், முஸ்லிம் லீக் கட்சியை உயிரை அழிக்கும் நுண்கிருமி என்று ஆதித்யநாத் விமர் சித்தார். தற்போது இதற்கும் ஒருநோட்டீஸை கண்துடைப்பு போலதேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கிறது.இந்நிலையில்தான், ஆதித்யநாத்தை தேர்தல் ஆணையம் கண்டிக்கிறதா, அல்லது அவருக்குகாதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறதா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். அதேபோல, அரசு அதிகாரியான ராஜீவ் குமார், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த விஷயத்திலும், தேர்தல் ஆணையம் சிறு குழந்தைகளுக்குச் சொல்வது போல, அப்படிச் சொல்லக் கூடாது; இப்படிச்செய்யக் கூடாது என்று வெறுமனே அறிவுரை கூறிக் கொண்டிருப்பதாகவும் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.

;