tamilnadu

img

தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லை... பாஜக எம்.எல்.ஏ. மகன் மீது புகார் 

ஹைதராபாத் 
தெலுங்கு நடிகை சஞ்சனா விடுமுறை நாளான ஞாயிறன்று தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தின்  மாதாபூரில் உள்ள இரவு கேளிக்கை விடுதிக்குச் சென்று இருந்தார். அதே விடுதியில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடுவின் மகன் ஆஷிஷ் கவுடுவும் வந்திருந்தார். நடிகை சஞ்சனாவை கண்டவுடன் அவரை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.  ஆஷிஷின் பிடியிலிருந்து தப்பிய சஞ்சனா நேராக மாதாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய, விஷயத்தை மோப்பம் பிடித்து  ஆஷிஷ் கவுடு தலைமறைவாகி விட்டார்.   

;