tamilnadu

img

தில்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட சதிவேலை : மாணிக் சர்க்கார்

அகர்தலா:
தில்லியின் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் “முன்கூட்டியே திட்டமிட்ட சதி வேலையாகும்” என்று திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கூறினார்.தில்லி வன்முறை வெறியாட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக நிதி சேகரிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்தபோது மாணிக் சர்க்கார் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:   

தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் 53 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ரவுடிகள் தில்லியின் வெளியேயிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கடைகளையும், வீடுகளையும், சூறையாடி யிருக்கின்றனர். நினைவுச் சின்னங்களை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கின்றனர். இது மதவெறியர்களால் முன்கூட்டியே திட்டமிட்ட மேற்கொள்ளப்பட்ட சதியாகும். வன்முறையைத் தூண்டிய நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட அனைவரும் முன்வர வேண்டும்.  இவ்வாறு மாணிக் சர்க்கார் கூறினார். நிதி வசூல் சேகரிப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களால் மாநிலம் முழுதும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (ந.நி.)

;