சென்னை,டிச.15- சாமியார் நித்தியானந்தா மீது சென்னை மாநகர ஆணையாளரிடம் மேலும் ஒரு பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான தஞ்சாவூ ரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். புகார் மனுவில், நித்தியானந்தா ஆசிரமத்தில் 11வருடங்க ளாக இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு நித்தியானந்தா வலுக்கட்டாயமாக தன்னை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக புகாரில் தெரி வித்துள்ளார். இந்த புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.