tamilnadu

img

பவுத்த மதத்தினரை வேட்டையாடியது யார்?

புதுதில்லி:
“இன்றைய சவாலான காலக்கட்டத்தில் புத்தரின் போதனைகளே தீர்வு,இக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் புத்தரே தீர்வு” என்று பிரதமர்மோடி பேசியிருப்பதை, காங்கிரஸ் தலைவர் ஹுசைன்தல்வாய் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.“புத்தரின் கொள்கைகளை பிரதமர் நினைவூட்டியதை வரவேற்கிறேன், ஆனால் அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.முதலில் இந்தியாவில் அதிகம் பவுத்தர்கள் இருந்தனர். இங்கு நல்ல பணிகளை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் ஆதிசங்கரர் காலத்தில் சித்ரவதை செய்யப்பட்டு வெளியே விரட்டப்பட்டனர். அதனால்தான் அவர்கள் சீனா, ஜப்பான் மற்றும் வேறு நாடுகளுக்குச் சென்றனர். எனவே, கடந்த காலத்தில் நடந்தது தவறு என்பதை பிரதமர் இந்துக்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும், கண்டிக்க வேண்டும், அதேநேரம் பிரிவினையை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை உறுதிசெய்ய வேண்டும்.”இவ்வாறு ஹுசைன் தல்வாய் கூறியுள்ளார்.

;