tamilnadu

img

கேரள நிலச்சரிவு: தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை:
கேரள மாநில நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறின் தேயிலை எஸ்டேட் பகுதியில், பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 80 பேர் மாயமாகினர். அதில் இருந்து தப்பித்த சிலர், தகவ

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதி தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக் கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேரளா முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

;