tamilnadu

img

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறும்.... நம்பச் சொல்கிறார் பிரதமர் மோடி

புதுதில்லி:
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தியா பொருளாதார வளர்ச்சி பெறும் என்னை நம்புங்கள் என பிரதமர் நரேந்திரமோடி தொழில் கூட்டமைப்பினரை தாஜா செய்துள்ளார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) 125- ஆவது ஆண்டு கூட்டத்தில் (கார்ப்பரேட்டுகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள்)  ஆன்லைன் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 

கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன. இந்தியா பொருளாதார வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தவும் வேண்டும். மேட் இன் இந்தியா பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதே எனது ஆசை.

இந்தியா தொழில் துறையில் மீண்டும் வளர்ச்சி பெறும். என்னை நம்புங்கள். நான் இதை எப்படி நம்புகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியாவின் திறமை, புதுமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அதன் தொழில்முனைவோர், தொழிலாளர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.கொரோனா நமது வேகத்தை (வளர்ச்சியின்) மந்தப்படுத்தியிருக்கலாம், ஆனால் இந்தியா இப்போது ஊரடங்கில் இருந்து திறத்தல் கட்டம் -1 க்கு நகர்ந்துள்ளது. எனவே, ஒரு வகையில், வளர்ச்சியை மீண்டும் கொண்டுவருவதற்கான பாதை ஏற்கனவே தொடங்கிவிட்டது.இந்தியத் தொழில்துறையினருக்கு ஆதரவாக நிற்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி, “என்னை நம்புங்கள், வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது அவ்வளவு கடினம் அல்ல. தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கான பாதை தொழில்துறைக்கு முன்பாகவே உள்ளது. நாங்கள் இன்னும் பலமடைந்து முன்னேறுவோம்.

தொழில்துறை தலைவர்கள் “உள்நாட்டு உத்வேகத்தின் சாம்பியன்களாக” இருக்க வேண்டும்.முதலீடு மற்றும் வணிகத்திற்கு சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் உலகத்திற்கான தயாரிப்புகளை நாம் தயாரிக்க வேண்டும்,” உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க உதவும் வகையில் ஒரு வலுவான உள்ளூர் விநியோகச் சங்கிலியை முதலில் உருவாக்குமாறு உற்பத்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.

;