இந்தியாவின் மிக நீளமான குவஹடி மற்றும் வடக்கு குவஹடியை இணைக்கு நதி ரோப்வே பொதுமக்களுக்காக இன்று திறக்கப்பட்டது. இதனை மாநில நிதி மந்திரி டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது சுமார் 1.82 கி.மீ நீளம் கொண்டது.இந்த ரோப்வேயானது ரூ-56 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தியாவில் மிக நீளமான நதி ரோப்வே ஆகும்.
வடக்கு குவஹாத்தியில் உள்ள டோல் கோவிந்தா கோயிலிருந்து பன்பஜாரில் உள்ள கச்சாரி காட் வரையிலான தூரத்தை கடக்க 1 மணி நேரம் ஆகிறது.ஆனால் நதி ரோப்வே மூலம் அத்தகைய தூரத்தை 7-8 நிமிடத்தில் கடக்க முடியும்.
ஒரே நேரத்தில் 30 பயணிகள் மற்றும் இரண்டு ஆபரேட்டர்கள் உள்பட சுமார் 32 பேர் செல்ல முடியும். ஒட்டுமொத்தமாக ஒரு மணி நேரத்திற்கு 250 பயணிகள் பயன் பெறுவார்கள் என குவஹடி மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.