tamilnadu

img

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

புதுதில்லி, ஆக.31- மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜி திங்க ளன்று காலமானார். அவ ருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜி கால மானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரி வித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலை யிலேயே இருந்து வந்த நிலை யில், நினைவு திரும்பா மலேயே புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் திங்களன்று அவரது உயிர் பிரிந்தது. மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவில் இருந்தார். உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் திங்களன்று உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. பிரணாப்முகர்ஜி 1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி பிறந்தார். பாரத் ரத்னா, பத்ம விபூஷன் விருது களையும் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். நாட்டின் 13-ஆவது குடியரசுத் தலைவராக 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளார்.

;