tamilnadu

img

560 பல்கலைக்கழகங்களில் தேர்வு மானியக்குழு செயலாளர் தகவல்

புதுதில்லி, ஜூலை 19-  கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 560 பல்கலைக்கழங்கள் மாணவர் களுக்கு தேர்வு நடத்துவதாக பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களின் செமஸ்டர் மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் நடத்த பல்கலைக் கழக மானியக்குழு அறிவுறுத்தியி ருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகளை செப்டம்ப ருக்குள் நடத்தி முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால்  பல மாநி லங்கள் இந்த தேர்வுகளை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தன. இதற்கிடையே, தேர்வு நடத்தும் சூழல் குறித்து பதிலளிக்குமாறு 945 பல்கலைக்கழகங்களுக்கும் பல்க லைக்கழக மானியக்குழு தகவல் அனுப்பியது. இதில் 755 பல்கலைக்கழ கங்கள் தேர்வுகள் நடத்துவதற்கு சாதக மாக பதில் அனுப்பியுள்ளதாக கூறப்படு கிறது.  இதில் 194 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் அல்லது நேரடியாக அல்லது இருவழிகளிலும் தேர்வுகளை நடத்தி உள்ளன. மேலும் 366 பல்க லைக்கழகங்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) அல்லது செப்டம்பரில் தேர்வுகள் நடத்துவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் அளித்துள்ளன. இந்த கொரோனாவுக்கு மத்தி யிலும் 560 பல்கலைக்கழங்கள் மாண வர்களுக்கு தேர்வு நடத்துவதாக பல்க லைக்கழக மானியக்குழு செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.