புதுதில்லி, மே 24 - நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்காக ரூ. 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டங்களை அறிவித்து இருப்ப தாக பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னும் கூறிவரும் நிலையில், “இந்தி யப் பொருளாதாரம் நடப்பாண்டில் எதிர்மறை (மைனஸ்) வளர்ச்சி காணவே வாய்ப்பிருக்கிறது” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பகிரங்கமாக அறி வித்தார். உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயரும், ஜிடிபி வீழ்ச்சி தொடரும் என்றும் சில உண்மைகளை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் சக்திகாந்த தாஸூக்கு, காங்கிரஸ் மூத்தத் தலை வர் ப. சிதம்பரம் சில கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வைத் துள்ளார்.
அதில், “இந்தியாவில் உள் நாட்டு தேவை குறைந்து விட்ட தாகவும், பொருட்களின் விற்பனை மிகவும் மோசமாக இருப்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வரும் 2020-21 நிதியாண்டில் மைனஸ் நிலைக்கு செல்லும் என்று கூறிய பிறகும் சக்திகாந்த தாஸ், சந்தை யில் ஏன் அதிகமான பணப்புழக் கத்தை செலுத்துகிறார்..? ‘உங்கள் கடமையைச் செய் யுங்கள், நிதி சார்ந்த நடவடிக்கை களை எடுங்கள்’ என்று வெளிப்ப டையாக மத்திய அரசிடம் தெரி விக்க வேண்டியதுதானே..” என்று கேட்டுள்ளார். “நாட்டின் பொருளாதாரத்தை எதிர்மறை வளர்ச்சிக்கு கொண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கை குறித்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெட்கப்பட வேண் டும்” எனவும் ப. சிதம்பரம் காட்ட மாக பதிவிட்டுள்ளார்.