“மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு” காண்பதற்கு தற்போதுள்ள தனி தீர்ப்பாயங்களை கலை த்து விட்டு ஒரே நதிநீர்த்தீர்ப்பாயம் அமைக் கும் சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கெனவே தனித் தனியாக அமைக் கப்பட்டுள்ள நதி நீர்த் தீர்ப்பாயங்கள் செயல் படுவதிலேயே சிக்கல் உள்ள நிலையில், குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையே கர்நாடக அரசு மதித்து நடக்க தவறி வரும் நிலையில், அனைத்து நதி நீர் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்ற மத்திய அரசின் முடிவு நதி நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பினை திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவே தெரி கிறது. அத்துடன் நடுவர் மன்ற தீர்ப்பை அரசித ழில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்கிற அம்சமும் நதிநீர்ப்பிரச்சனையை தீர்க்க எவ்வகையிலும் உதவாது. மத்திய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்ற வகையில் ஒரே தீர்ப்பாயம் என்பது நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டிப்புதைக்கும் விதமாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஒரே நதி, ஒரே தீர்ப்பாயம் என்ற மசோதாவினை கைவிட்டு, நாட்டில் நிலவும் நதி நீர்ப் பிரச்ச னையினை உடனுக்குடன் தீர்க்கும் வகையி லான முறையில் தற்போதுள்ள தீர்ப்பாயங்க ளுக்கு போதிய அதிகாரம் அளித்து சட்டமி யற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது.