tamilnadu

img

மொபைல் டவர்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறதா?

மொபைல் டவர்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, டி.கே. ரங்கராஜன் நாட்டில் மொத்த உள்ள மொபைல் டவர்கள், மாநிலங்கள்வாரியாக எவ்வளவு என்றும், அவை வெளியேற்றும் கதிர்வீச்சின் அளவை வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக ஏதேனும் அறிக்கை வந்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும், கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாட்டில் உள்ள மொபைல் டவர்களின் எண்ணிக்கை, மாநில வாரியாகத் தனியே தரப்பட்டிருக்கிறது என்றும், 2019 மே 31 தேதியளவில், நாட்டிலுள்ள 334 அடிப்படை செலுத்துப்பெருவி நிலையங்களில் (Base Transreceiver Stations) வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் கதிர்வீச்சை வெளியிடுவதாக அறிக்கைகள் வந்துள்ளன என்றும், இவ்வாறு வரம்பைமீறி கதிர்வீச்சை வெளியிட்ட நிலையங்கள் மீது டெலிகாம் துறையினர் அபராதம் விதித்திருப்பதாகவும், மேலும் ஹரியானா மாநிலத்தில் ஒரு ஒரு நிலையம் மூடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் வரையறைக்கு உட்பட்ட அளவிலேயே கதிர்வீச்சு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

(மேலும் அமைச்சர் அளித்துள்ள அறிக்கையின்படி நாட்டில் மொத்தம் 5,54,259 மொபைல் டவர்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 42,977 இருக்கின்றன.)

(ந.நி)