tamilnadu

img

சுவாசிக்க தகுதியற்ற நிலையில் தில்லி

புதுதில்லி,நவ.3- தில்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்றின் தரத்தில் கடுமை யான மாசு ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தில்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித் துள்ளது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள தக வலில்,தில்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மிகவும் கடுமையான மாசு அளவான 500-ல் இருந்து தற்போது காற்றின் தரம் 900 என்ற குறியீட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரிப்பு காரணமாக தில்லியில் திங்க ளன்று முதல் வாகனக் கட்டுப் பாடு அமலுக்கு வருகிறது. ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்கள் என்ற அடிப்ப டையில் வாகனங்கள் அனு மதிக்கப்பட உள்ளன.