tamilnadu

img

உ.பி.யில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை : பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா கைது...

லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசமாநிலத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் குண்டர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இச்சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப் பையும் ஏற்படுத்தியுள்ளன. 

இச்சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்காமல் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பாலியல் வன்கொ டூரக்காரர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேசம் ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூரில் கும்பலால் பாலியல் பலாத்காரத்தால் 2 பெண்கள் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ்கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி ஆகியோர் வியாழனன்று ஹத்ரசுக்கு  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத் தினரை சந்திக்க சென்றனர்.  அப்போது  அவர்களது வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் யமுனா விரைவுநெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி நடந்துசென்றனர்.  இதனை தொடர்ந்து தடையை மீறி சென்றதாக பிரியங்காந்தி, ராகுல்காந்தியை ஐபிசி 188 பிரிவின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை தொடர்ந்து போராடுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹத்ரஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைநேர்மையாக நடக்க வேண்டு மானால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.