tamilnadu

குற்ற தலைநகர் தில்லி ஆம் ஆத்மி எம்பி., குற்றச்சாட்டு

 புதுதில்லி, ஜூன் 24- நாட்டின் குற்ற தலைநகராக தில்லி உருவாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார். தில்லியில் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடை பெறுகிறது. இந் நிலையில், நாடாளு மன்ற மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான சஞ்சய் சிங் பேசும் போது, நாட்டின் குற்ற தலைநகராக தில்லி உருவாகியுள்ளது. இந்த பிரச்சனை பற்றி பேசுவதற்கு உள்துறை அமைச்சகம் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என கூறினார். அந்த கூட்டத்திற்கு தில்லி முதல்வருக்கும் அழைப்பு விடப்பட வேண்டும். குற்றம் நடைபெறாமல் நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தில்லி சாலைகளில் கடந்த ஒரு மாதத்தில் 220 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஒரு வருடத்தில் 243 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். தில்லியின் முகர்ஜி நகரில் இந்த மாத தொடக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் சரப்ஜீத் சிங் என்பவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டார் எனவும் கூறினார்.