இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் இன்று காலை உயிரிழந்தார். அடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 51 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ எட்டியுள்ளது. இவர்களில் 170 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று மட்டும் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள மற்றும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய இடங்கள் என்று 16 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.