tamilnadu

img

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 945 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 945 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 69,878 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,75,701 ஆக அதிகரித்துள்ளது. 
அதே சமயம் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 55,794 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,97,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,22,578 பேர் குணமடைந்துள்ளனர்.