புதுச்சேரி மாநிலத்தில் தற்போது மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாராயண சாமிக்கு ஞாயிறன்று இரவு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை கொரோனா முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்வரை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து எந்த வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் முதல்வர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் முதல்வர் அலுவகம் மட்டும் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.