tamilnadu

img

பனாரஸ் இந்து பழ்கலைகழக மாணவர் சுட்டுக் கொலை

பனாரஸ் இந்து பழ்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலியாகினார்.


கடந்த 2017ல் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தடுக்க காவல்துறை நடத்திய தடியடியில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையில் பல்கலைக்கழக பேருந்து ஒன்றை எரிக்க உதவியதற்காக கவுரவ் சிங் என்ற மாணவர் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் தற்போது தனது முதுகலை பட்டப்படிப்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வந்தார்.


இந்நிலையில் மாணவர் கவ்ரவ் சிங் நேற்று மாலை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிர்லா விடுதியின் முன்பு தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் கவுரவ் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் வயிற்றுப் பகுதியில் 3 தோட்டாக்கள் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் நேற்று இரவு மரணமடைந்தார்.


இதைத்தொடர்ந்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறை 4 மாணவர்களை கைது செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பல்கலைக்கழகத்தின் ஒழுங்குநிலை கட்டுப்பாட்டாளர் ரோயானா சிங்கை காவல்துறை பதிவு செய்துள்ளது.


;