tamilnadu

அலன், தாஹா ஜாமீன் மனுக்கள் விசாரணை ஒத்திவைப்பு

கோழிக்கோடு:
யுபிஏபி சட்டத்தின் கீழ் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து பரிசீலனை செய்ய காவல்துறையினர் தரப்பில் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து அந்த மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர்கள் அலன் சுபைப், தாஹா பசல், இவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சட்டத்திற்குப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ)கீழ் கைது காவல்துறையின ரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி கோழிக்கோடு மாவட்ட நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது காவல்துறையினர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

;