tamilnadu

img

பதஞ்சலி நிறுவனம் மக்களை தவறாக வழி நடத்தினால் நடவடிக்கை - மகாராஷ்டிர அமைச்சர் எச்சரிக்கை

பாபா ராம் தேவின் நிறுவனமான பதஞ்சலி மக்களை தவறாக வழி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதுவரை நாடுமுழுவதும்  6,48,315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  18,655 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றுக்கு எதிர்ப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள்   தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனில் என்கிற மருந்தினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மருந்தானது கொரோனாவை குணப்படுத்தும் என்றும், பின்னர் குணப்படுத்துவதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லையென்றும் நிறுவன தலைவர் பாபா ராம்தேவ் மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
பதஞ்சலியின் கொரோனில் மருந்தானது, கொரோனா தொற்றினை குணப்படுத்தாது என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தற்போது தெரிவித்துள்ளார். மேலும், கொரோனில் தயாரிப்பாளரால் ஏதேனும் புகார்கள் கூறப்படுமாயின், மாநில உள்துறை துறையின் உதவியுடன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 
ஆயுஷ் அமைச்சகம் கொரோனில் என்கிற மருந்தினை விற்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த மருந்து நோய் எதிர்ப்பு திறனை மட்டுமே அதிகரிக்கும். ஆனால், மருந்தின் பெயர் குழப்பத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை கவனிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.