tamilnadu

img

பதவி உயர்வு பெறும் 43 ஐபிஎஸ் அதிகாரிகள்

சென்னை, பிப்.18- தமிழகத்தில் பதவி உயர்வு அடிப்படை யில் காலியாகவுள்ள ஐபிஎஸ் அதிகாரி கள் பணியிடங்களை சுட்டிக்காட்டி, 2020-21 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல், மத்திய உள்துறை அமைச்ச கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில்  43 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விரை வில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.  அதில் 4 டிஜிபி பணியிடங்கள் நிரப்ப அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் விதிப்படி 3 டிஜிபி பணியிடங்களை மட்டும் நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.  பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், 43 இடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகரன் நடத்திய ஆலோசனையில் 43 பேருக்கும் பதவி உயர்வு, ஒதுக்க வேண்டிய பணியிடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படு கிறது.

;