tamilnadu

img

‘370’ சட்ட நீக்கத்தை எதிர்ப்போர் பாகிஸ்தான் செல்லவாம்..!

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ரகுபர் தாஸ் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், முதல்வர் ரகுபர் தாஸ், அம்மாநிலத்தின் தியோகர் மாவட்டம் சரத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: “காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு 370-ஆவது பிரிவு முட்டுக்கட்டையாக இருந்ததால், அந்தப் பிரிவை மத்திய அரசு நீக்கியது. ஆனால் அதை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும். அந்த நாட்டிற்குச் சென்று அங்கு பிரதமராகவோ, முதல்வராக, எம்எல்ஏ-வாகவோ ஆகிக்கொள்ளுங்கள்” என்று ரகுபர் தாஸ் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை, ஜார்க்கண்ட்டில் ஓரிடத்தில் கூட வெற்றிபெற விடக்கூடாது என்றும் ரகுபர் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

;